தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

1
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை:

மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் உள்ள ஒரு சில இடங்களில் மிதமான மழைப்பொழிவு, மேலும் சில இடங்களில் அதிகனமழையும் பெய்து வருகிறது. மேலும், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்றும் நாளையும் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, ஜூலை 12 முதல் ஜூலை 15 வரையிலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் அனைத்திலும் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

சென்னையை பொறுத்த வரைக்கும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 33-34 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குமரிக் கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் 45 கிலோ மீட்டர் வேகம் முதல் 55 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும் என்பதால் இன்றும் நாளையும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? அமைச்சர் முக்கிய விளக்கம்!

மேலும், ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மேற்குறிப்பிட்டுள்ள கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், லட்சத்தீவு பகுதி, கர்நாடகா – கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வரும் ஜூலை 15ஆம் தேதி வரைக்குமே பலத்த காற்று வீசும் என்பதால் ஜூலை 15 வரைக்கும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!