தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
தமிழகம் முழுவதும் இன்று பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், நாளையும் கிட்டத்தட்ட 14 மாவட்டங்களில் இதேபோல், கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை அறிக்கை:
வடகிழக்கு பருவமழை காரணமாகவும் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், இன்று புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று மழை பெய்து வருகிறது. இதேபோல், நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் நாளை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை பெரம்பூரில் 17 செமீ மழையும், தேனி வீரபாண்டி பகுதிகளில் குறைந்த அளவான 1 செமீ மழையும் பெய்துள்ளது.
ஆவினின் புதிய அறிமுகம்: டிலைட் பால் – 3 மாதங்களுக்கு கெடாது!
Follow our Instagram for more Latest Updates
இதேபோல், நவம்பர் 6ம் தேதி வரையில் தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மாநில தலைநகரான சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.