தமிழகத்தில் ‘இந்த’ 2 மாவட்டங்களில் கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்!

0
தமிழகத்தில் 'இந்த' 2 மாவட்டங்களில் கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் 'இந்த' 2 மாவட்டங்களில் கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் ‘இந்த’ 2 மாவட்டங்களில் கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில வாரங்களாக லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கனமழை:

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மே மாதத்தில் வெப்பச்சலனம் ஏற்பட்டு அவ்வப்போது மழை பொழிவும் காணப்பட்டது. வழக்கத்தைவிட இந்தாண்டு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. அதனால் தமிழகம் மற்றும் புதுவையில் மழை வெளுத்து வாங்கியது. இந்த கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் பெய்த மழையால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது காற்றின் திசை மாறுபாடு காரணமாக மீண்டும் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதே போல கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில் 8 செ.மீ மழையும், நடு வட்டம், மேல் கூடலூர், கூடலூர் பஜார் பகுதிகளில் தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் இன்று நீலகிரி மற்றும் கோவை ஆகிய இரு மாவட்டங்களிலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஜூலை 10ம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சென்னையில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு பணிப்பயன் கிடையாது? ஐகோர்ட் அதிரடி!

மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும் ஜூலை 11ம் தேதி வரை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதனால் மேற்சொன்ன நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!