அடுத்த 3 நாட்களுக்கு கனமழை, மீனவர்களுக்கான எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்!
வடமேற்கு வங்க கடல் மற்றும் ஒடிசா கடற்கரை பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென்மேற்கு பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக உருவெடுத்துள்ளது. இதனால், அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கனமழை:
தென்மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாகவே கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்த வரைக்கும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வடமேற்கு வங்க கடல் மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உண்டானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியினால் தான் கேரளா, தமிழகம் போன்ற மாநிலங்களில் சில பகுதிகளில் மழைப்பொழிவு இருந்து வருகிறது.
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆக.10) மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
இந்நிலையில், வடமேற்கு வங்க கடல் மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில் உண்டான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு பகுதியில் நகர்ந்து அடுத்து 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக வலுப்பெறும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி, தென்மேற்கு பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக உருவெடுத்துள்ளது. இதனால், ஒடிசா பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஒடிசா மாநிலத்தை தொடர்ந்து சத்தீஸ்கர், கோவா, மேற்கு மத்தியப்பிரதேசம், கிழக்கு மத்தியப்பிரதேசம், குஜராத், ஆந்திர பிரதேசம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஒரு சில பகுதிகளில் கனமழை முதல் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், தென்மேற்கு பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த பகுதியின் காரணமாக எந்த பாதிப்பும் இருக்காது எனவும், பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.