தமிழகத்தின் அடுத்த 5 நாட்களுக்கு தொடரும் கனமழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

0
தமிழகத்தின் அடுத்த 5 நாட்களுக்கு தொடரும் கனமழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழகத்தின் அடுத்த 5 நாட்களுக்கு தொடரும் கனமழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழகத்தின் அடுத்த 5 நாட்களுக்கு தொடரும் கனமழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகப்பகுதிகளின் மேல்‌ நிலவும் வளிமண்டல சுழற்சியினால் ஒரு சில இடங்களில் மிதமான மழை மற்றும் கனமழையும், ஒரு சில இடங்களில் சூறாவளி காற்றும் அடிக்க கூடும் என்ற தகவலும், இதனால் மீனவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை விடுப்பு பற்றியும் இந்திய வானிலை ஆய்வு துறை வெளியிட்டுள்ளது.

வானிலை தகவல்‌ :

தமிழகத்தின் மேல்‌ நிலவும்‌ வளிமண்டல சுழற்‌சி காரணமாக பல மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் லேசான மழைப்பொழிவும் இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 2) மற்றும் ஆகஸ்ட் 3,4,5,6 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளின் ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

02.08.2022: தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, கோயம்புத்தூர்‌, நீலகிரி, ஈரோடு, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை மற்றும்‌ விருதுநகர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ மிக கனமழையும்‌, தூத்துக்குடி, சிவகங்கை, கரூர்‌, திருச்சிராப்பள்ளி, நாமக்கல்‌, சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌ மற்றும்‌ ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

03.08.2022: தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, கோயம்புத்தூர்‌, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை மற்றும்‌ விருதுநகர்‌ மாவட்டங்களில்‌ மிக கனமழையும்‌, திருச்சிராப்பள்ளி, கரூர்‌, நாமக்கல்‌, சேலம்‌, திருப்பத்தூர்‌, வேலூர்‌ மற்றும்‌ ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

Exams Daily Mobile App Download

04.08.2022: நீலகிரி, கோயம்புத்தூர்‌, தென்காசி, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம்‌, கரூர்‌ மற்றும்‌ நாமக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை முதல்‌ மிக கனமழையும்‌, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர்‌, வேலூர்‌ மற்றும்‌ ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

05.08.2022: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர்‌, திண்டுக்கல்‌, தேனி, தென்காசி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌ மற்றும்‌ ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

06.08.2022: நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர் மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை :

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதனால் நகரின்‌ ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும்‌. அப்போது தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 32-33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில்‌ இருக்கக்கூடும்‌.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதனால் நகரின்‌ ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும்‌. அப்போது தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 33-34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

02.08.2022: குமரிக்கடல்‌ பகுதிகள், மன்னார்‌ வளைகுடா மற்றும் தமிழக கடலோர பகுதிகள், இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல்‌ 60 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மேலும், லட்சத்தீவு பகுதிகள்‌, கேரள – கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும்‌ மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

03.08.2022, 04.08.2022: லட்சத்தீவு பகுதிகள்‌, கேரள – கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌கிழக்கு மற்றும்‌ மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள், குமரிக்கடல்‌ பகுதிகள், மன்னார்‌ வளைகுடா,தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள், ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய மேற்கு மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

05.08.2022, 06.08.2022: குமரிக்கடல்‌ பகுதிகள், மன்னார்‌ வளைகுடா, தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌, ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய மேற்கு மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகள், கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல்‌
பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!