தமிழகத்தில் நவ.30 முதல் மழை படிப்படியாக குறையும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் தொடர்ந்து நான்கு வாரங்களாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் மழை படிப்படியாக குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை குறைவு:
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த நான்கு வார காலமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குமரி கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்றும், மழைப்பொழிவு பற்றியும் ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
அதாவது விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, குமாரி தென்காசி மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று கூறப்பட்டது. மேலும் மதுரை, நெல்லை, கடலூர், விழுப்புரம், காரைக்கால், புதுச்சேரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழையானது இவ்வாரத்தில் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நாளை குமரி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
டிச.1ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் டிச.2ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 மணி நேரத்துக்கு நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.