ஜூலை 18 வரை அதி கனமழை பெய்யும் – வானிலை எச்சரிக்கை!

0
ஜூலை 18 வரை அதி கனமழை பெய்யும் - வானிலை எச்சரிக்கை!
ஜூலை 18 வரை அதி கனமழை பெய்யும் - வானிலை எச்சரிக்கை!
ஜூலை 18 வரை அதி கனமழை பெய்யும் – வானிலை எச்சரிக்கை!

அடுத்த திங்கட்கிழமை, ஜூலை 18 வரை மாநிலத்தில் கனமழையுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை, இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வானிலை எச்சரிக்கை:

ஒரு வாரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருவதால் ஏற்கனவே வெள்ளம் போன்ற சூழ்நிலையில் தத்தளிக்கும் மேற்கு கடற்கரை மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பருவமழை ஜூன் மாத தொடக்கத்தில் குறைந்த அளவிலேயே தொடங்கியது. இருப்பினும் தற்போது ஒடிசாவில் வாரம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது, கடுமையான மழையால் மாநிலத்தின் பல மாவட்டங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

Exams Daily Mobile App Download

குறிப்பாக மல்கங்கிரி மற்றும் காலாஹண்டி பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கஜபதி மாவட்டத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் விளைவாக குறைந்தது பத்து வீடுகள் சேதமடைந்துள்ளன. அதேபோல், சத்தீஸ்கரையும் மழை விட்டு வைக்கவில்லை, அந்த வகையில் மாநிலத்தின் தென் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதன் காரணமாக பள்ளிகள் , கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் கோதாவரி ஆற்றின் துணை நதியான சபரியில் உபரி நீர் வருவதால், இந்த சாலைகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மேலும் ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் ஜூலை 18 வரை மிக கனமழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 27,000 வரை உயரும் அகவிலைப்படி!

ஒடிசாவின் நுவாபாடா, பராகர், பலங்கிர், சுபர்னாபூர் மற்றும் பௌடா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து சுந்தர்கர், கெந்துஜார், தியோகர், மயூர்பஞ்ச் மற்றும் ஜாஜ்பூர்; பராகர், சம்பல்பூர், ஜார்சுகுடா, சுந்தர்கர், கட்டாக் அங்குல், தேன்கனல் மற்றும் ஜாஜ்பூர் மாவட்டங்களும் இதில் அடங்கும். இதையடுத்து சத்தீஸ்கரில் பீஜப்பூர் மற்றும் சுக்மாவில் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது, அதே நாளில் பஸ்தார், தண்டேவாடா, நாராயண்பூர், கான்கேர், பலோட் மற்றும் ராஜ்நந்த்காவ்ன் , பிஜப்பூர், நாராயண்பூர், கான்கர், பலோட் மற்றும் ராஜ்நந்த்கான் ஆகிய இடங்களில் ஆரஞ்சு எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!