மக்களே கவனம்!!….தமிழகத்தில் இன்று ‘இந்த’ மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!!

0
மக்களே கவனம்!!....தமிழகத்தில் இன்று 'இந்த' மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்!!
மக்களே கவனம்!!....தமிழகத்தில் இன்று 'இந்த' மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்!!
மக்களே கவனம்!!….தமிழகத்தில் இன்று ‘இந்த’ மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழக பகுதிகளின் மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்‌சி காரணமாக வருகிற 28ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்‌

தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்‌சி காரணமாக இன்று முதல் 28ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதே போல ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம்‌, நாமக்கல்‌, கரூர்‌, திருச்‌சிராப்பள்ளி, புதுக்கோட்டை, பெரம்பலூர்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, தேனி, கள்ளக்குறிச்‌சி, விழுப்புரம்‌, திருப்பத்தூர்‌, அரியலூர்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, கடலூர்‌ உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்‌சியால் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ வருகிற 29,30 ஆகிய நாட்களில் ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய குமரிக்கடல்‌ பகுதிகள்‌, இலங்கைக்கு தெற்கே உள்ள தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று 60 கிலோ மீட்டர்‌ வேகம் வரையிலும் வீசக்கூடும்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் போராட்டம் – மின் வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

அதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதே போன்று நாளை மறுநாள் (செப்.28) இலங்கைக்கு தெற்கே உள்ள தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 60 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌ எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 29,30 ஆகிய தேதிகளில் தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று 60 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌ என்பதால் மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!