தமிழகத்தில் அக்.4 வரை அதி கனமழைக்கு வாய்ப்பு – ஷாகீன் புயல் எதிரொலி!
அரபிக்கடலில் உருவாகியுள்ள ஷாகீன் புயல் தீவிர புயலாக மாறும் சூழல் நிலவியுள்ளதால் தமிழகத்தில் அதிக கனமழை பொழிவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஷாகீன் புயல்:
வங்கக் கடலில் உருவான ‘குலாப் புயல்’ கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆந்திரா மற்றும் ஓடிசாவின் கடலோர மாவட்டங்களில் கரையை கடந்தது. அதன்பின் புயலின் தன்மை குறைந்த நிலையில் இந்த புயலானது தெலுங்கானா, மகாராஷ்டிரா வழியாக நகர்ந்து, குஜராத் கடல் பகுதியில் மையம் கொண்டிருந்ததாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய குலாப் புயல் புதிய புயலாக உருவெடுத்துள்ளது.
திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் – தேவஸ்தான அதிகாரி விளக்கம்!
புதிய புயலாக மாறிய குலாப் புயலுக்கு ஷாகீன் என பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டதாவது அரபிக்கடலில் உருவான ‘ஷாகீன்’ புயல், நேற்று காலை 5.30 மணி நிலவரப்படி, குஜராத்தின் தேவபூமி துவாரகாவில் இருந்து மேற்கு, வடமேற்கில் சுமார் 400 கி.மீ., தொலைவிலும், பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து தெற்கு, தென்மேற்கே 260 கி.மீ., தொலைவில் மையம் கொண்டிருந்தது.
தமிழகத்தில் சட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை – கால அவகாசம் நீட்டிப்பு!
இது, அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும். இதனால், மீனவர்கள் அக்.4ம் தேதி வரை வட அரபிக்கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்லக்கூடாது. புயல் காரணமாக மேற்கு வங்கம், சிக்கிம், தமிழகம், கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் அக்.2 முதல் 4ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அதி கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.