தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கனமழை:
இந்தியாவில் தற்போது பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ஜூலை 27ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இன்றைய வானிலை அறிக்கையின் படி தமிழகத்தில் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நாளை (ஜூலை 26) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிய வசதி அறிமுகம்!
அதனை தொடர்ந்து ஜூலை 27ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், நாமக்கல், திருச்சி ஆகிய தென் தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் சென்னையில் அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.