தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை வெளியீடு!
தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கனமழை:
மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும், தமிழகத்தில் கோடைகாலம் முடிவடைந்து மழைப்பொழிவும் இருப்பதால் நீர்நிலைகளும் நிரம்பி வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில் மிதமான மழைப்பொழிவும் இருந்து வருகிறது. சென்னையை பொறுத்த வரைக்கும் அவ்வப்போது லேசான சாரலுடன் வாடைக்காற்று வீசி வருகிறது.
TN Job “FB Group” Join Now
இதனிடையே, தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், மதுரை, கோயம்புத்தூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் மிதமான மழைப்பொழிவு இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TNCSC நிறுவனத்தில் 527 காலிப்பணியிடங்கள் – ஜூலை 8 விண்ணப்பிக்க இறுதி நாள் !
மேலும், தமிழகத்தை பொறுத்த வரைக்கும் அடுத்த மூன்று நாட்களுக்கு நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், இந்த 5 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் மிதமான மழைப்பொழிவு இருக்கும் எனவும், 48 மணி நேரமும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்வும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போதைய லேசான மழைபொழிவால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.