தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!
மழை பெய்ய வாய்ப்பு:
தமிழகத்தில் கோடை காலத்தின் நடுப்பகுதி நிலவி வரும் நிலையில் பகல் நேரங்களில் அதிக வெப்பநிலை காணப்படுகிறது. வழக்கத்தை விட நடப்பு ஆண்டில் கோடை காலத்தில் அதிக வெப்பம் நிலவுவதால் வர இருக்கும் கத்தரி வெயிலை நினைத்து மக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக தமிழகத்தில் ஒரு வாரமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
மாணவர் சேர்க்கைக்கு இனி மாற்றுச் சான்றிதழ் (TC) அவசியம் இல்லை – மாநில கல்வித்துறை உத்தரவு!!
மகாராஷ்டிரா முதல் தென் தமிழக கடலோர பகுதி வரை வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், திருப்பத்தூர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியகுமாரி போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் வழக்கத்தை விடவும் 4 முதல் 5 டிகிரி வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருப்பத்தூரில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்