தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமெடுத்துள்ளது. இன்றைய வானிலை தகவலின் படி பெரம்பலூர், அரியலூர், திருச்சி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கனமழை:

இந்தியாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதனால் கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் மும்பை ஆகிய பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இடைவிடாது பெய்த கன மழையால் நீர் நிலைகள் நிரம்பி வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் சாலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்தாண்டு தமிழகத்தில் கோடை காலத்தில் நல்ல மழை பொழிவு காணப்பட்டது.

மாநிலத்தில் இனி இரு பாலர் பள்ளிகள் மட்டுமே செயல்படும்? அதிரடி உத்தரவு!

அதிக வெயிலின் தாக்கம் இருக்கக் கூடிய அக்னி நட்சத்திரத்தில் மழை கொட்டி தீர்த்தத்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அதிக வெப்பத்தின் காரணமாக நிகழ்ந்த வெப்ப சலனத்தாலும் தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. அதனை தொடர்ந்து தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தற்போது பருவமழை மீண்டும் தீவிரமெடுத்துள்ளதால் அடுத்த மூன்று நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக கொடைக்கானல், தல்லாகுளம், நிலக்கோட்டையில் 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அடுத்த 3 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகையில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஜூலை 30ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நகரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!