தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!
ஆந்திரா மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கனமழை:
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கிக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக கடந்த மாதத்தில் அசாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 2,930 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குஜராத்தில் ஒரு வாரமாக பெய்த கனமழையால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன, இதுவரை 50000 பேர் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்கள்.
Exams Daily Mobile App Download
மேலும் சவுராஷ்டிரா ஆகிய பகுதிகளில் பெய்த கனமழையால் 14 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த நாட்களில் பெய்த மழையால் அரைமணி நேர கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் ஓடியும், தேங்கியும் நின்றதனால் சாலையோர கடைக்காரர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதிக்கு ஆளாகினர். மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
TNUSRB SI தேர்வு முடிவுகள் வெளியீடு – தெரிந்து கொள்ளும் வழிமுறைகள் இதோ
மேலும் இதுபோன்ற பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 10 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்ட உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.