மதுரை, சிவகங்கை உட்பட 10 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் தமிழ்நாட்டில் நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்:
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 2021 நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து. ஒரு மாத காலமாக வெளுத்து வாங்கிய கனமழையால் காஞ்சிபுரம், திருவாரூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அதன் பிறகு ஜனவரி மாத தொடக்கத்தில் மழை பொழிவு குறைந்து வறண்ட வானிலை நிலவி வருகிறது. மேலும் மார்ச் ஏப்ரல் மாதம் கோடை காலம் என்பதால் வெளியின் தாக்கமும் அதிகரித்துள்ளது.
TN TRB தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு – TET புதிய பாடத்திட்ட விபரங்கள் வெளியீடு!
இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஒரு வார காலமாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்ட்டா மாவட்டங்களில் சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. கடந்த வாரம் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தால் ,கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்தது. இந்த நிலையில் இன்றைய வானிலை தகவலின் படி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏப்ரல் 21ம் தேதி வரை மிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஓரிரு மணி நேரத்தில் தருமபுரி, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.