பொதுமக்களுக்கு எச்சரிக்கை.. தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இந்த நிலைதான்.. கனமழை அலர்ட்!

0
பொதுமக்களுக்கு எச்சரிக்கை.. தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இந்த நிலைதான்.. கனமழை அலர்ட்!
பொதுமக்களுக்கு எச்சரிக்கை.. தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இந்த நிலைதான்.. கனமழை அலர்ட்!
பொதுமக்களுக்கு எச்சரிக்கை.. தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இந்த நிலைதான்.. கனமழை அலர்ட்!

தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்:

தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மாற்று புதுவையில் இன்றி (டிச. 05) மற்றும்‌ நாளை (டிச.06) பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. மேலும் 6ம் தேதி வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து டிச.7ம் தேதியன்று கடலூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, தஞ்சாவூர்‌ புதுக்கோட்டை , மயிலாடுதுறை மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அடுத்தாக டிச.8 செங்கல்பட்டு, கடலூர்‌, விழுப்புரம்‌, திருவள்ளூர்‌, சென்னை, காஞ்சிபுரம்‌, கள்ளக்குறிச்‌சி, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, அரியலூர்‌, பெரம்பலூர்‌,மயிலாடுதுறை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, இராணிப்பேட்டை, வேலூர்‌, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும்‌ இராமநாதபுரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழை பெய்யக்கூடும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் சேர்க்கை குறித்த புகார் – நீதிமன்றம் உத்தரவு!

மேலும் அன்றைய தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழகம்‌ நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிச.09 திருவள்ளூர்‌, சென்னை, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, விழுப்புரம்‌, அரியலூர்‌, மயிலாடுதுறை, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர்‌, திருப்பத்தூர்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும்‌ சேலம்‌, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, கடலூர்‌, பெரம்பலூர்‌, திருச்‌சிராப்பள்ளி, நாமக்கல்‌, கரூர்‌ மற்றும்‌ ஈரோடு மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல் மிக மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

Exams Daily Mobile App Download

சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!