தமிழகத்தின் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!
அடுத்து வரும் 3 மணிநேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அதன்படி, 19 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை வாய்ப்பு
தமிழகத்தில் கடந்த ஒரு சில வாரங்களாக வெப்பநிலை அதிகளவு காணப்பட்டு வருகிறது. குறிப்பாக, கோடை காலம் துவங்குவதற்கு முன்னமே, மார்ச் மாதத்தில் இருந்து வெப்பநிலை உயர்ந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில், கடந்த ஒரு சில நாட்களாக ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் 100 டிகிரி செல்ஸியஸை தாண்டி வெப்பநிலை பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று (மார்ச் 16) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்தியாவில் ரூ.70,000 கோடி செலவில் பாதுகாப்பு படை ஆயுதங்கள் – மத்திய அமைச்சகம் ஒப்புதல்!
அதன்படி, மதுரை, தென்காசி, விருதுநகர், நீலகிரி, கன்னியாகுமரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், திருப்பத்தூர், தூத்துக்குடி, கோவை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.