தமிழகத்தில் இன்று 7மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு – முக்கிய எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்று 7மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கனமழை:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும், இந்த கனமழை புதன்கிழமை வரை நீடிக்கும் எனவும், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், நாமக்கல் ஆகிய 7 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழகத்திலேயே அதிகபட்ச வெப்பநிலையாக மதுரையில் 37.6 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழக வங்கிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
சென்னையை பொறுத்த வரையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பொழியலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 65 கிலோமீட்டர் வரைக்கும் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதை தவிர்க்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.