இந்தியாவில் வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை – அமைச்சர் அறிவிப்பு!
இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்பவர்களின் ஜி.எஸ்.டி உரிமம் ரத்து செய்யப்படும் என்று வணிகவரி, மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பு:
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தனி நபரும் அல்லது நிறுவனமும் அவர்கள் ஈட்டும் குறிப்பிட்ட வருமானத்திற்கு ஏற்ப அவரவர் நாட்டிற்கு வரி செலுத்த வேண்டும். இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் வரி செலுத்துவது முக்கிய கடமையாகும். அதாவது ஒவ்வொரு தனி மனிதன் செலுத்தும் வருமான வரிகள் தான் அரசாங்கத்துக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக விளங்குகிறது. இந்த வரிகளின் மூலம் அரசு சார்ந்த சேவைகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த வரிகள் ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியில் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்திய அரசாங்கம் நேரடி வரி, மறைமுக வரி என இரண்டு வகையான வரிகளை வசூலித்து வருகிறது. இதில் வருமான வரி என்பது நேரடி வரி விதிப்பின் கீழ் வருகிறது. மேலும் இது தொடர்பான விவகாரங்களை வருமான வரித்துறை நேரடியாக கவனித்து வருகிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தனி நபரும் சரியான முறையில் அரசுக்கு வரி செலுத்த வேண்டும், தவறும் பட்சத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்த வகையில் வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்களின் ஜி.எஸ்.டி உரிமம் ரத்து செய்யப்பட்டு அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு
Exams Daily Mobile App Download
இது குறித்து வணிக வரித் துறையின் நுண்ணறிவு பிரிவு அலுவலர்களுடனான சீராய்வு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. அரசின் வரி வருவாயை உயர்த்தும் நோக்கில் கோட்ட வாரியாக ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாக இந்த கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது. தற்போதைய அரசு பொறுப்பேற்றபின் வணிக வரி வருவாய் 61 சதவீதமும், பத்திரப்பதிவு வருவாய் 70 சதவீதமும் உயர்ந்துள்ளது. மேலும் நடப்பு ஆண்டில் வரி வருவாயை உயர்த்த அதிகாரிகளுக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வணிகவரி, மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.