தமிழகத்தில் ஊரடங்கு குறித்த வதந்திகள் – சுகாதார செயலர் அறிக்கை!!!
அதிகரிக்கும் கொரோனா:
தமிழகத்தில் கடந்த வாரத்தில் இருந்து கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழக சுகாதார செயலர் அவர்கள் சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டை முக்கிய மருத்துவ அதிகாரிகள் மற்றும் சுகாதார துறை அலுவலர்களுடன் நேரில் சந்தித்து பார்வையிட்டார்.
பேருந்து போக்குவரத்துகள் நிறுத்தம், பூங்காக்கள் மூடல் – கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்!!
மருத்துவமனையில் சோதனை செய்து முடித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர் சந்திப்பில், கொரோனா நோய் பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது. உலகின் மற்ற நாடுகளில் பரவி வருவது போல் இந்தியாவிலும் மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, மத்யபிரதேசம் போன்ற 19 மாநிலங்களில் தொற்று அதிகரித்துள்ளது. இந்த பட்டியலில் தமிழ்நாடும் உள்ளது.
காரணங்கள்:
தமிழகத்தில் கடந்த மாதங்களில் அதிக அளவிலான குடும்ப விழாக்கள் மற்றும் திருவிழாக்கள் நடைபெற்றதும் நோய் பரவலுக்கு காரணமாகும். மக்கள் தொற்று பரவலை கவனத்தில் கொள்ளாமலும், அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முறையாக பின்பற்றாமல் இருந்ததே தொற்று அதிகரித்ததற்கான காரணமாகும். தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அதிக அளவிலான பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்