தமிழகத்தில் நவ.1 முதல் 1 – 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – சுகாதாரத்துறை செயலர் அறிவுறுத்தல்!
தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி நிர்வாகம் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களுக்கு கொரோனா தாக்கி வந்த நிலையில் விடுமுறை வழங்கப்பட்டு சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
PF அக்கவுண்ட்டில் இருந்து பணம் எடுக்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – முக்கிய குறிப்புகள்!
9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களை தொடர்ந்து 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்தனர். இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது பள்ளிகள் திறப்பதை தொடர்ந்து சுத்திகரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. முதல் மற்றும் 2ம் அலையை தொடர்ந்து கொரோனா 3ம் அலை குறித்த அச்சம் தற்போது பெற்றோர்களிடம் அதிகமாக காணப்பட்டு வருகிறது.
தமிழக அரசில் தமிழ் தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
எனவே, மூன்றாம் அலையின் பாதிப்பு எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்கிற நிலையில், அரசு வழங்கியுள்ள கட்டுபாடுகளுடன் கூடிய தளர்வுகளை மக்கள் மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்றும், நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி நிர்வாகம் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.