இந்தியாவில் ஒரே நாளில் 11,539 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை கடந்துள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரத்தை குறித்த அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல்
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. இதே போல நாட்டில் தொற்றால் 4 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனாவால் பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகிதம் குறித்த அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 11,539 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
இதையடுத்து இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,43,39,429 ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து நாட்டில் கொரோனாவால் புதிதாக 43 பேர் இறந்துள்ளனர். அதன்படி இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,27,332 ஆக உயர்ந்துள்ளது. இதனால் உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆக குறைந்துள்ளது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதன்படி ஒரே நாளில் 26,58,755 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு துறை ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு – DA குறித்த தகவல்!
Exams Daily Mobile App Download
இதுவரை நாட்டில் 2,09,67,06,895 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று தொற்றில் இருந்து ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,37,12,218 ஆக அதிகரித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக குணமடைந்தோர் விகிதம் 98.59% ஆக குறைந்துள்ளது. அதனால் குறைந்த அளவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்