தமிழக அனைத்து குடும்பங்களுக்கும் சுகாதார அட்டை? அமைச்சர் விளக்கம்!

0
தமிழக அனைத்து குடும்பங்களுக்கும் சுகாதார அட்டை? அமைச்சர் விளக்கம்!
தமிழக அனைத்து குடும்பங்களுக்கும் சுகாதார அட்டை? அமைச்சர் விளக்கம்!
தமிழக அனைத்து குடும்பங்களுக்கும் சுகாதார அட்டை? அமைச்சர் விளக்கம்!

தமிழக மக்கள் நலன் கருதி மக்கள் நல்வாழ்வுத்துறை பல சிறப்பான திட்டங்களை அமல்படுத்தி உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் “குடும்ப சுகாதார அட்டை” வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

குடும்ப சுகாதார அட்டை:

தமிழகத்தில் உள்ள பொது மக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகளை வீடுகளுக்கே நேரில் சென்று வழங்க, “தமிழ்நாடு அரசு மக்களைத் தேடி மருத்துவம்” என்னும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் சுகாதார ஆய்வாளர்கள், கிராமப்புற செவிலியர், பெண் சுகாதார தன்னார்வலர்கள் உள்ளிட்டவர்கள் மூலம் சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, முடக்குவாதம், பெண்களை கருப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறிவதற்காக ஆய்வுக்கு பரிந்துரைத்தல் மற்றும் நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டு அதற்குரிய மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

விரைவில் முடிவுக்கு வரும் பாரதி கண்ணம்மா சீரியல்? ரசிகர்கள் ஷாக்!

மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் பட்டியல் சேகரித்து, அவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தமிழகம் முழுவதும் அனைத்து குடும்பங்களுக்கும் “குடும்ப சுகாதார அட்டை” விநியோகிக்கும் திட்டம் நடைமுறைபடுத்தப்படும், இந்த திட்டம் “மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு பகுதியாக” செயல்படுத்தப்படும் என கூறியுள்ளார். இந்த அட்டையில் குடும்ப உறுப்பினர்கள் பெயர், வயது, தொழில் மருத்துவ குறிப்புகள் இடம் பெற்று இருக்கும்.

Exams Daily Mobile App Download

இத்திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு நேரில் சென்று சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்பட்டு உரிய சிகிச்சையும் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் 5.98 கோடி பெரியவர்கள் உள்ளனர். அவர்களில் 4.48 கோடி பேர் கடந்த ஒரு ஆண்டில் பரிசோதிக்கப் பட்டுள்ளனர். இந்த வகையில் சென்னையில் இதுவரை 17 லட்சம் பேர் பரிசோதிக்கப் பட்டுள்ளனர். அவர்களில் 1.9 லட்சம் பேர் உயர் ரத்த அழுத்தத்தாலும் 1.5 பேர் சர்க்கரை வியாதியாலும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவருக்கும் சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாக சென்று மருந்து பெட்டகங்கள் வழங்கி வருகிறார்கள். இதுவரை 83 லட்சம் மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மாநகராட்சி பகுதியில் சில குடும்பங்களுக்கு “குடும்ப சுகாதார அட்டை” வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!