தலைமை ஆசிரியர் பணிமாறுதல் எதிரொலி – மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்!!
ஆத்தூர் அருகே அரசு பள்ளியில் பணி புரிந்த ஆசிரியர் தற்போது பணிமாறுதல் ஆகிறார். இந்நிலையில் அந்த ஆசிரியர் தங்களுக்கு மீண்டும் வரவேண்டும் என்று பள்ளி மாணவர்கள் சாலை மரியா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
பள்ளி மாணவர்கள்:
இந்த காலங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையே மிக சிறப்பான உறவுகள் மேம்பட்டு வருகிறது. மேலும் சில ஆசிரியர்கள் மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப பல விஷயங்களை செய்து வருகின்றனர். இதனால் அந்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு விடுகிறது. மேலும் இந்த நெருக்கத்தினால் மாணவர்கள் மிக சிறப்பாக படித்தும் வருகிறார்கள். மேலும் அந்த ஆசிரியர் மீது மாணவர்களுக்கு பெரும் பற்றும் இருக்கும்.
தற்போது ஆசிரியர்கள் மீது மாணவர்கள் அதிக பிரியத்தை கொண்டிருந்தால் அது எந்த அளவிற்கு இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் ஓர் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கோட்டை அரசினர் மேல்நிலை பள்ளியில் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து மாணவர்கள் மற்றும் மாணவிகளின் கல்வி தரத்தையும் உயர்த்தி மிக சிறப்பாக பணியாற்றை வந்தார் அந்த பள்ளியின் தலைமையாசிரியர்.
இந்திய உணவு துறையில் வேலை – விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு!!
தற்போது அவர் பணிமாறுதல் காரணமாக வேறு இடத்திற்கு சென்று விட்டார். இந்நிலையில் அவர் மீண்டும் தங்களுக்கு ஆசிரியராக வரவேண்டும் என்று பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . தற்போது அவர்களை பள்ளி நிர்வாகம் சமாதானம் செய்து வருகிறது. இதன்மூலம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் இடையே உள்ள உறவு எப்படி என்பது அனைவருக்கும் தெரியவந்துள்ளது.