எச்.சி.எல் நிறுவன ஊழியர்களுக்கு ரூ.700 கோடி சிறப்பு போனஸ் அறிவிப்பு!!
எச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் 10 பில்லியன் டாலர் வருவாய் மைல்கல்லை கடந்த நிலையில், அந்நிறுவன ஊழியர்களுக்கு ரூ.700 கோடி மதிப்பில் சிறப்பு போனஸ் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
சிறப்பு போனஸ் அறிவிப்பு:
கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பல நிறுவனங்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்தன. இதனால் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கின. இதற்கிடையில் எச்.சி.எல் நிறுவனம் கடந்த ஆண்டில் 10 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டி சாதனை படைத்துள்ளது. இதற்கான உழைத்த தனது ஊழியர்களுக்கு அந்நிறுவனம் பத்து நாட்கள் சம்பளத்திற்கு சமமான சிறப்பு போனஸ் தொகையை வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணியிடங்கள் – பிப்ரவரி 10 இல் நேர்முகத்தேர்வு!!
இது தொடர்பாக எச்.சி.எல் டெக்னாலஜிஸின் தலைமை அதிகாரி கூறுகையில், “எங்கள் ஊழியர்கள் தான் எங்களின் மதிப்புமிக்க சொத்து. கொரோனா தொற்றுநோய் இருந்த போதிலும் மிகுந்த அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்துடன் பணிபுரிந்தனர். இது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பங்களித்தது. எங்கள் 1,59,000 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் மூலமாக 2020ம் ஆண்டில் 10 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டி சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த போனஸ் வழங்கப்படும். சிறப்பு போனஸ் பிப்ரவரி 2021 இல் ஊழியர்களுக்கு வழங்கப்படும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்