மாநிலத்தில் ‘One Family One Dog Norm’ விதிமுறை ரத்து – நாய்களை பதிவு செய்வது கட்டாயம்!!
மாநிலத்தில் ஒரு குடும்பத்திற்கு ஒரு நாய் என்று அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் இந்த உத்தரவை உயர்நிதிமன்றம் தடை செய்துள்ளது. மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பார்ப்போம்.
வளர்ப்பு நாய்:
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் நாய் கடித்தது தொடர்பாக ஒருவர் இழப்பீடு கோரி வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது, ஏற்கனவே குருகிராம் முனிசிபல் கார்ப்பரேஷன் ‘ஒரு குடும்பம் ஒரு நாய்’ என்ற விதிமுறையை அமல்படுத்தியிருந்தது. அதன்படி தற்போது ஒரு குடும்பத்திற்கு ஒரு வளர்ப்பு நாய் மட்டுமே வைத்திருக்க வேண்டும்.
தமிழக அரசு போக்குவரத்து துறை ஊழியர்களின் முக்கிய கோரிக்கை – அமைச்சர் அளித்த பதில்!
Exams Daily Mobile App Download
அத்துடன் வளர்ப்பு நாய்களை பதிவு செய்து ஒவ்வொரு ஆண்டும் ரூ.12000-ஐ அரசுக்கு கட்டணமாக செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஒரு குடும்பம் ஒரு நாய் என்ற விதிமுறையை ரத்து செய்வதாகவும், வளர்க்கும் நாய்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.