தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் மதுபான பார்களும் மூடல் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுடன் செயல்பட்டு வரும் பார்களில் தொடர்ச்சியாக முறைகேடுகள் நடந்து வருவதையடுத்து, அனைத்து டாஸ்மாக் பார்களையும் அடுத்த 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பார்கள் மூடல்
தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டும் முக்கியமான காரணிகளில் ஒன்று டாஸ்மாக் மதுபான கடைகள். அந்த வகையில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மதுபான கடைகளுக்கும் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்யும் உரிமையை தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் மூலம் தமிழக அரசிற்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக ரூ.100 கோடி லாபம் கிடைத்து வருவதாக தரவுகள் கூறுகிறது. இதுவே பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்கள், வார இறுதி நாட்களில் இந்த மதுபான விற்பனை சக்கைபோடு போடும்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!
இப்போது தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நிலவி வரும் கொரோனா பேரலை தொற்று காரணமாக மதுபான கடைகள் மூடப்பட்டதால், இதன் மூலம் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டிருந்தது. இப்போது ஊரடங்கு தளர்வுகளுக்கு மத்தியில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுடன் பார்களும் வழக்கம் போல செயல்பட துவங்கி உள்ளன. இதற்கிடையில் அரசு நடத்தி வரும் டாஸ்மாக் கடைகள், பார்கள் உள்ளிட்டவற்றில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடைபெற்று வருவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், இந்த முறைகேடுகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. அதாவது, டாஸ்மாக் கடைகளில் மதுபான விலை உயர்வை போலவே பார்களில் விற்கப்படும் பொருட்களுக்கும் அதிக விலை விதிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக கடைகளில் ரூ.10க்கு வாங்கும் பொருட்கள் டாஸ்மாக் பார்களில் ரூ.50க்கு விற்கப்படுகிறதாக தெரிகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சில்லறை மதுபான கடைகளின் இணைப்பில் உள்ள பார்களில் தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கு புது டெண்டர் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? தேர்தலுக்கு பின்னர் வெளியாகும் அறிவிப்பு? பொதுமக்கள் அதிர்ச்சி!
இந்த டெண்டரில் தற்போது முறைகேடுகள் நடந்திருப்பதாக உயர் நீதிமன்றத்தில் பார் உரிமையாளர்கள் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.சரவணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூடும்படிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதாவது, தமிழக டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்க மட்டுமே அனுமதி இருக்கும் நிலையில் பார்களை நடத்துவதற்கு சட்டத்தில் இடமில்லை. அதனால் இன்னும் 6 மாதத்திற்குள் அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.