கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணத்தை இழந்துள்ளீர்களா? இனி அந்த பிரச்சனை இல்லை! அக். 1 முதல் புதிய விதி அமல்!

0
கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணத்தை இழந்துள்ளீர்களா? இனி அந்த பிரச்சனை இல்லை! அக். 1 முதல் புதிய விதி அமல்!
கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணத்தை இழந்துள்ளீர்களா? இனி அந்த பிரச்சனை இல்லை! அக். 1 முதல் புதிய விதி அமல்!
கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணத்தை இழந்துள்ளீர்களா? இனி அந்த பிரச்சனை இல்லை! அக். 1 முதல் புதிய விதி அமல்!

இந்தியாவில் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் பண பரிவர்த்தனைகளில் பாதுகாப்பு அளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு விதிகள் மாற்றப்பட்டுள்ளது.

புதிய விதிகள்:

இந்தியாவில் வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் பண பரிவர்த்தனைகாக கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை வழங்குகிறது. இதன் மூலம் மக்கள் சாதாரண கடைகள் முதல் ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் வரை அனைத்து இடங்களிலும் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பண மோசடிகள் நடப்பதும் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க வங்கிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அண்மையில் மத்திய ரிசர்வ் வங்கி ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்களை சேமித்து வைக்க கூடாது என்று உத்தரவிட்டது. எப்போதும் நாம் ஆன்லைன் வழியாக ஒரு பொருளை வாங்கும் போது அதற்கான பணத்தை வங்கி கணக்கு வாயிலாகவே செலுத்துகிறோம். இதற்கு உங்களின் வங்கி கணக்கு மற்றும் கார்டு சார்ந்த விவரங்களை உள்ளிட வேண்டும். மறுமுறை நீங்கள் ஷாப்பிங் செய்யும் போது அதுவாகவே கார்டு விவரங்களை உள்ளீடும். இந்த முறை மூலம் வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்படுகிறது.

TNUSRB, TET, IBPS, RRB, SBI தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? Free Mock Test Available!! Register Now!!

Exams Daily Mobile App Download

அதனால் ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் விவரங்களை சேமிக்க தடை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வாயிலாக நடைபெறும் மோசடிகளை தடுக்க விதிகள் மாற்றப்பட்டுள்ளது. அதாவது கார்டு ஆன் ஃபைல் டோக்கனைசேஷன் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் கிரெடிட் ,டெபிட் கார்டுகள் வழங்குபவர்கள் மற்றும் அதன் நெட்வொர்க்கை தவிர வேறு யாரும் வாடிக்கையாளர்களின் விவரங்களை நேரடியாக பெற முடியாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் டோக்கனைசேஷன் முறை நடைமுறைக்கு வரவுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!