நீங்க இன்னும் கொரோனா தடுப்பூசி போடலையா? அப்போ இந்த செய்தி உங்களுக்குதான்! மறக்காம படிங்க!

0
நீங்க இன்னும் கொரோனா தடுப்பூசி போடலையா? அப்போ இந்த செய்தி உங்களுக்குதான்! மறக்காம படிங்க!
நீங்க இன்னும் கொரோனா தடுப்பூசி போடலையா? அப்போ இந்த செய்தி உங்களுக்குதான்! மறக்காம படிங்க!
நீங்க இன்னும் கொரோனா தடுப்பூசி போடலையா? அப்போ இந்த செய்தி உங்களுக்குதான்! மறக்காம படிங்க!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வரும் 25ம் தேதி 50,000 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி முகாம்:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கோவிட்ஷீல்டு மற்றும் கோவாக்சின் என்ற இரு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகள் நல்ல பலனை அளிப்பதனால் மக்கள் தவறான தகவல்களை நம்பாமல் விரைந்து 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்தி கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியது. மேலும் அரசு சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் .வாரந்தோறும் சனி அல்லது ஞாயிறு கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வரும் 25ம் தேதி ஞாயிறு அன்று 50,000 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து 1,133 ஆரம்ப மற்றும் வட்டார சுகாதார நிலைய மருத்துவ மையங்களில் வருகிற புதன்கிழமை (செப்.28) தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும் என்றும் கூறியுள்ளார். மேலும் 14 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசிகள் செலுத்தப்படும்.

வங்கி பயனர்களே உஷார்! அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் Bank விடுமுறை – முழு லிஸ்ட் உள்ளே!

Exams Daily Mobile App Download

இதுவரை தமிழகம் முழுவதும் தகுதியுடைய 96% பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் 91% பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார். இந்த மாதம் 30ம் தேதி வரை மத்திய அரசின் அறிவிப்பின்படி பூஸ்டர் தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்படும். தற்போது பரவி வரும் காய்ச்சல் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் காய்ச்சல் தான். அதனால் அச்சம் கொள்ள தேவையில்லை காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 3 முதல் 4 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!