இந்த தொகுப்பாளினியும் நடிக்க வந்துவிட்டாரா? இனி இதிலும் நம்பர் 1 தான்!
தொகுப்பாளர்கள் பலர் சமீபத்தில் பல வேறு பரிமாணங்களில் அவதாரம் எடுத்து வரும் நிலையில், அந்த வரிசையில் புதிதாக ஒருவர் இணைந்துள்ளார்.
சீரியல் என்ட்ரி:
தொகுப்பாளர்கள் தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஆணிவேராக உள்ளனர். ஒரு நிகழ்ச்சி எப்படி செல்ல வேண்டும் என்பது தொகுப்பாளர்கள் கையில் தான் உள்ளது. அந்த வகையில், 1 அல்ல 2 அல்ல கிட்டத்தட்ட 20 வருடங்களாக சின்னத்திரையில் தொகுப்பாளராக மக்கள் மனதில் பதிந்து விட்டவர் அர்ச்சனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் இருந்து தற்போது வரை தனக்கான இடத்தை கைப்பற்றியவர்.
ஒற்றுமைக்கு பெயர் போன பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமா இது? வெடித்த பூகம்பம் .. முற்றிய குடும்ப சண்டை!
Follow our Instagram for more Latest Updates
நடிப்பிற்கு அர்ச்சனா புதியவர் இல்லை என்றாலும், சீரியல் களத்திற்கு அர்ச்சனா புதியவர் தான். இவர் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் தவமாய் தவமிருந்து சீரியலில் ஒரு சிறப்பு தோற்றத்தில் வர உள்ளார். இவர் என்ன மாதிரியான கதாபாத்திரமாக வர உள்ளார் என்பது குறித்து அனைவருக்கும் எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது. நிச்சயம் இந்த வாய்ப்பையும் அர்ச்சனா செமையாக பயன்படுத்தி தனது திறமையை வெளிப்படுத்துவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.