அட கடவுளே..! பிக்பாஸ் பிரபலத்திற்கு இப்படி ஒரு கொடுமை நடந்திருக்கா? ஷாக்கான ரசிகர்கள்!
விஜய் டிவி “பிக்பாஸ்” நிகழ்ச்சி மூலமாக ஏகப்பட்டவர்கள் பிரபலமடைந்துள்ளனர். அந்த வரிசையில் பிரபலமானவர் தான் பிக்பாஸ் ஜூலி. இந்நிலையில் அவர் வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவம் குறித்து நடன நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
பிக்பாஸ் ஜூலி:
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் சின்னத்திரையில் மாறுபட்ட கான்சப்ட் உடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி 5 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட நிலையில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். பிரபலங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் சாமானிய மக்களில் ஒருவராக இருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மூலமாக பிரபலமானவர்கள் பலர் இருக்கின்றனர். அந்த வரிசையில் பிக்பாஸ் முதல் சீசனில் களமிறங்கியவர் தான் ஜூலி.
இவர் முன்னதாக ஜல்லிக்கட்டு தடை குறித்து மெரினாவில் நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறினார். அதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த அவர், பல பொய்களை பேசி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றார். நிகழ்ச்சியில் பல எபிசோடுகளாக உள்ளே இருந்த அவருக்கு வெளியே வந்ததும் பலர் திட்டி குவிக்க தொடங்கினார்கள். அதனால் வருத்தத்தில் இருந்த அவர் மீண்டும் நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 முடிந்த நிலையில் பிக்பாஸில் இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதிலும் ஜூலி போட்டியாளராக களமிறங்கினார். அந்த நிகழ்ச்சியில் அவருக்கு சில நல்ல பெயர் கிடைத்தது. அதனை தொடர்ந்து அவர் நடன நிகழ்ச்சி ஒன்றில் தனது வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவம் குறித்து பேசி இருக்கிறார். அதில் அவரிடம் லண்டனில் நர்ஸ் வேலைக்காக மும்பை ஏஜென்சியிடம் ரூ. 3 லட்சம் பணம் கட்டி இருந்தேன். ஆனால் அவர்கள் அந்த பணத்தை ஏமாற்றிவிட்டதாகவும் அப்போது தன்னுடைய குடும்பம் தான் ஆறுதலாக இருந்தது என கண்ணீருடன் சொல்லி இருந்தார், அந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்