இன்று மாலை 6 மணி முதல் இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
ஹரியானா மாநிலத்தில் கொரோனா அதிகமாக பரவி வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே அமலில் உள்ள இரவு ஊரடங்கு மாலை 6 மணி முதலே தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு ஊரடங்கு அமல்:
ஹரியானா மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பலத்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் மக்கள் வெளியே வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதன் காரணமாக பல தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், இரவு ஊரடங்கில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டது. அதன் படி இரவு 10 மணி முதல் ஊரடங்கு அமலானது. மேலும் பகல் நேரங்களில் சில கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. அதன் படி திருமண நிகழ்ச்சிகள் உள் அரங்குகளில் நடைபெற்றால் அதில் 50 பேரும், திறந்த வெளியில் நடைபெற்றால் அதில் 200 பேரும் பங்கேற்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.
தமிழகத்தில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி – முக்கிய உத்தரவு வெளியீடு!!
இந்நிலையில் தற்போது குறையாமல் பரவும் கொரோனா தாக்கம் காரணமாக மீண்டும் நேர மாற்றத்தை ஹரியானா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் வெளியிட்டுள்ளார். அதன்படி இன்று முதல் மாலை 6 மணி தொடங்கி இரவு ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த நேரத்தில் அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.