4 மாவட்டங்களுக்கு நவம்பர் 22, 25 ஆம் தேதிகளில் விடுமுறை அறிவிப்பு – தேர்தலால் சண்டிகர் அரசு உத்தரவு!

0
4 மாவட்டங்களுக்கு நவம்பர் 22, 25 ஆம் தேதிகளில் விடுமுறை அறிவிப்பு - தேர்தலால் சண்டிகர் அரசு உத்தரவு!
4 மாவட்டங்களுக்கு நவம்பர் 22, 25 ஆம் தேதிகளில் விடுமுறை அறிவிப்பு - தேர்தலால் சண்டிகர் அரசு உத்தரவு!
4 மாவட்டங்களுக்கு நவம்பர் 22, 25 ஆம் தேதிகளில் விடுமுறை அறிவிப்பு – தேர்தலால் சண்டிகர் அரசு உத்தரவு!

ஹரியானா மாநிலம் சண்டிகரில் 4 மாவட்டங்களில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்குள்ள, அரசு அலுவலகங்கள், வாரியங்கள், மாநகராட்சிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நவம்பர் 22 மற்றும் 25 ஆம் தேதிகளில் விடுமுறை விடப்பட்டுள்ளது.

விடுமுறை அறிவிப்பு:

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் தேர்தலில் வாக்களிப்பது முக்கியமான கடமைகளில் ஒன்றாகும். 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதால் மாநில அரசுகள் தேர்தல் நடைபெறும் நாள் அன்று கல்வி நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை விடுகிறது. அந்த வகையில் வருகிற நவம்பர் 22 மற்றும் 25 ஆம் தேதிகளில் ஹரியானா மாநிலம் சண்டிகரில் உள்ள 4 மாவட்டங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது.

இனி எப்போ ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்தாலும் பணம் Refund – இதை மட்டும் செய்யுங்க!

Exams Daily Mobile App Download

தேர்தலுக்கான பிரச்சாரங்கள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில், ஃபரிதாபாத், ஃபதேஹாபாத், ஹிசார் மற்றும் பல்வால் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், வாரியங்கள், மாநகராட்சிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நவம்பர் 22 மற்றும் 25 ஆம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஜிலா பரிஷத் மற்றும் பஞ்சாயத்து சமிதி உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுவதால் மக்கள் அனைவரும் தங்களுடைய வாக்குகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!