ஹரியானாவில் ‘ஆல் பாஸ்’.. 10 ஆம் வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி அடைய புதிய யோசனை..

0
10 ஆம் வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி அடைய புதிய யோசனை
10 ஆம் வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி அடைய புதிய யோசனை

ஹரியானாவில் ‘ஆல் பாஸ்’.. 10 ஆம் வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி அடைய புதிய யோசனை..

ஹரியானாவில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பில் ஒரே ஒரு பாடத்துக்கான பொதுத்தேர்வு மட்டும் நிலுவை உள்ளது. அதற்கும் புதிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி நிலவரப்படி, இதுவரையில் 90 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 29 பேர் குணமாகியுள்ளனர். தற்போது 61 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளனர். உயிரிழப்புகள் ஏதும் இல்லை.

மேலும், கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மற்ற மாநிலங்களைப் போல், ஹரியானாவிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பில் ஒரு பாடத்துக்கான தேர்வு மட்டும் நிலுவை இருந்தது. மற்ற பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்து விட்டது.

இந்நிலையில், ஹரியானாவில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்படுவதாக, அம்மாநில முதல் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார். மேலும், 10 ஆம் வகுப்பில் நிலுவையில் உள்ள ஒரு பாடத்துக்கான தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அதற்குப் பதிலாக மற்ற பாடங்களில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், 11 ஆம் வகுப்புக்கு செல்லலாம் என்றும் அறிவித்துள்ளார்.

முதல்வர் மனோகரின் இந்த அறிவிப்பு அம்மாநிலத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முழுமையாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்புக்கு ஒரு பிரிவுக்கான பாடங்கள் மட்டும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!