முழு ஊரடங்கு தளர்வுகளுடன் ஜூலை 5 வரை நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று 2வது அலையை பாதிப்பு எண்ணிக்கையை கருத்தில் கொண்டு ஏற்கனவே மாநிலத்தில் அமலில் உள்ள முழு ஊரடங்கு உத்தரவினை மேலும் சில தளர்வுகளுடன் ஜூலை 5ம் தேதி வரை நீட்டிப்பதாக ஹரியானா மாநில அரசு அறிவித்து உள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
ஹரியானா மாநில அரசு ஏராளமான தளர்வுகள் உடன் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு உத்தரவினை நீட்டித்துள்ளது. அதன்படி பல்கலைக்கழகங்களின் வளாகங்களைத் திறக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது, ஆனால் தற்போது ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட உள்ளது. இது தவிர, ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு சந்தேகங்களை தீர்க்க வகுப்புகளை நடத்தலாம். மேலும் ஜூலை 31 வரை குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையங்கள் மூடப்படும்.
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு – நாளை முதல் அமல்!
ஹரியானா தலைமைச் செயலாளர் விஜயவர்தன் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஹரியானா அரசாங்கம் ஏற்கனவே விளையாட்டு அரங்கங்களை திறந்து வைக்க அனுமதி அளித்திருந்தது. ஆனால் இப்போது வெளிப்புற விளையாட்டுகளும் அவற்றில் நடைபெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஜூன் 28 முதல் முழு ஊரடங்கு அமல் – வங்கதேச அரசு!
மாநிலத்தில் கடைகளின் திறப்பு நேரம் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இருக்கும். உணவகங்கள், பார்கள் (மால்கள் உட்பட) 50 சதவீத திறனுடன் காலை 10 மணிக்கு திறந்து இரவு 10 மணிக்கு மூடப்படும். இரவு 10 மணி வரை வீட்டுக்கு உணவு விநியோகம் செய்யலாம். அதிகபட்சம் 50 பேருடன் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அனைத்து கார்ப்பரேட் அலுவலகங்களையும் முழு பணியாளர்களுடன் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எந்தவொரு திருமண விழாவிலும் 50 பேர் வரை கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.