ஆகஸ்ட் 2 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று பரவல் படிப்படியாக குறைந்து கொண்டே வரும் நிலையில் ஹரியானா மாநிலத்தில் ஆகஸ்ட் 2ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
முழு ஊரடங்கு:
மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. தினசரி 4 லட்சம் வரை புதிய பாதிப்புகள் பதிவாகி வந்தது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசுகள் சார்பில் தொற்று நிலவரத்துக்கு ஏற்ப ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மறுபுறம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்தது. இதன் விளைவாக தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இதனை கருத்தில் கொண்டு ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்படுகிறது. அதன் வரிசையில் தற்போது ஹரியானா மாநில அரசு ஆகஸ்ட் 2ம் தேதி அதிகாலை 5 மணி வரை முழு ஊரடங்கை நீட்டித்து உள்ளது.
மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 28% DA உயர்வு – அறிவிப்பு வெளியீடு!
இதில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளன. ஹரியானா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, மாநிலத்தில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும். இதற்கிடையில், ஒரு சில கட்டுப்பாடுகளை தளர்த்திய அரசு உணவகங்கள், பார்கள், ஜிம்கள், கிளப்ஹவுஸ் மற்றும் கோல்ஃப் மைதானங்களை 50% இருக்கை திறனுடன் திறக்க அனுமதித்துள்ளது.
வைப்பு நிதிக்கான (FD) சிறந்த வட்டி வழங்கும் வங்கிகள் – முழு விவரங்கள் இங்கே!
மால்களில் உள்ள உணவகங்கள் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் உணவகங்கள் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்பட முடியும். ஹோட்டல் மற்றும் மால்களில் உள்ள பார்கள் காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை 50% இருக்கை திறனுடன் திறக்க அனுமதிக்கப்படுகின்றன. ஹோட்டல், உணவகங்கள், துரித உணவகங்கள் இரவு 11 மணி வரை டோர் டெலிவரி செய்ய அனுமதிக்கப்படுகிறது
அனைத்து கடைகளும் ஷாப்பிங் வளாகங்களும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட வேண்டும். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மால்கள் திறந்திருக்கும். சினிமா அரங்குகள் 50% பார்வையாளர்களுடன் திறக்கப்படலாம். திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் 100 நபர்கள் வரை கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.