ஜூன் மாதத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – மாநில அரசு விளக்கம்!!
தேர்வு முடிவுகள்:
கொரோனா தொற்றின் காரணமாக ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. கடந்த கல்வி ஆண்டு முதல் பள்ளிகள் அனைத்தும் செயல்படாத நிலையில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மே 31ம் தேதி வரை கோடை விடுமுறை அளிப்பதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாகவும், அவர்களுக்கான இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது.
இன்று முதல் மே 31 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை -மாநில கல்வித்துறை அறிவிப்பு!!!
10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்தும் ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. இது தவிர குஜராத் மாநிலத்திலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கான மதிப்பீடு முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு ஜூன் மாதத்தில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் திறந்தவெளி பள்ளிகளுக்கான தேர்வுகளும் வழக்கமான மாணவர்களுடன் நடத்த திட்டமிட்டிருந்தது. தற்போது அவை மறுஅறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்