நேரடி தேர்வுகளுக்காக கல்லூரி, பல்கலைகள் மீண்டும் திறப்பு – ஹரியானா அரசு முடிவு!
ஹரியானா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் மாணவர்களுக்கு சந்தேகம் தீர்க்கும் வகுப்புகள், ஆய்வகங்களில் செய்முறை வகுப்புகள், செயல்முறை தேர்வுகள் போன்றவற்றுக்காக திறக்க அனுமதிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
நேரடி தேர்வுகள்:
ஹரியானா மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூலை 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்புகள் 50 க்கும் குறைவாக உள்ளது. மேலும், தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து உள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களை மீண்டும் திறப்பது பற்றிய அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது. மேலும், ஜூலை 16ம் தேதி முதல் மாநிலத்தில் வகுப்பு வாரியாக பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
Jio, Airtel மற்றும் VI நிறுவனங்களின் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் – BSNL உடன் ஒப்பீடு!
அதன்படி, மாணவர்களின் சந்தேகங்களை தீர்ப்பதற்கான வகுப்புகள், ஆய்வகங்களில் நடைமுறை வகுப்புகள், நடைமுறை தேர்வுகள் மற்றும் ஆஃப்லைன் தேர்வுகள் ஆகியவற்றிற்கு தேவையான சமூக தொலைதூர விதிமுறைகள் மற்றும் பிற வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளுடன் மீண்டும் கல்வி நிலையங்களை திறக்க ஹரியானா அரசு அனுமதித்துள்ளது. தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு மட்டுமே பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள விடுதிகளில் தங்க அனுமதி மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
டெல்லியின் தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொது சட்ட சேர்க்கை தேர்வை (கிளாட்) ஜூலை 23ம் தேதி அன்று நடத்த உத்தரவிட்டுள்ளார். மேலும், மாநிலத்தின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட திறந்தவெளி பயிற்சி மையங்கள், நூலகங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் அரசின் அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளுடன் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐ.டி.ஐ நிறுவனங்களும் மாணவர்களுக்கு சந்தேகம் தீர்க்கும் மற்றும், செய்முறை வகுப்புகளுக்காக திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.