பள்ளிகளுக்கு ஜனவரி 21ம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஹரியானா!

0
பள்ளிகளுக்கு ஜனவரி 21ம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஹரியானா!
பள்ளிகளுக்கு ஜனவரி 21ம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஹரியானா!
பள்ளிகளுக்கு ஜனவரி 21ம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஹரியானா!

ஹரியானா மாநிலத்தில் அதிகமான பனிப்பொழிவு காரணமாக பள்ளிகளுக்கு ஜனவரி 15ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த விடுமுறை மேலும் நீட்டிப்பு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது

பள்ளி விடுமுறை:

நாட்டில் பனிக்காலம் தொடங்கியதால் பல்வேறு நகரங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதில் குறிப்பாக ஜம்மு மற்றும் காஷ்மீர், உத்தரபிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. அதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.

பொங்கலையொட்டி ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.. எவ்வளவு உயர்ந்துள்ளது? விவரம் உள்ளே!

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில் ஹரியானா மாநிலத்தில் பனிப்பொழிவு காரணமாக கடந்த ஜனவரி 15ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஹரியானா மாநிலம் உட்பட வட இந்திய மாநிலங்களில் வரும் வாரங்களில் அதிகமான பனிப்பொழிவு நிலவும் என அறிவித்துள்ளது.

அதனால் தற்போது மாணவர்களின் நலன் கருதி ஹரியானா பள்ளிகளுக்கான விடுமுறையை நீட்டிப்பு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிகளுக்கு விடுமுறை வருகிற ஜனவரி 21ம் தேதி வரை விடுமுறை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!