இந்த மாதத்தில் வரப்போகும் குட் நியூஸ்.. அரசு பள்ளிகளில் 4000க்கும் மேற்பட்ட பணி நியமனம்!
தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்த மாநிலத்தில் அரசு பள்ளிகளில் சுமார் 4000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசு ஆசிரியர்கள்
கொரோனா கால கட்டத்திற்கு பிறகு நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். அத்துடன் மத்திய அரசு மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப விகிதாச்சார அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என அறிவித்துள்ளது. அதன்படி இதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில் தற்போது ஹரியானா மாநிலத்தில் கௌஷல் ரோஸ்கர் நிகாம் வழியாக நடத்தப்படும் அரசுப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது, கடந்த மாதம் சுமார் 2,075 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. இதே போல் இந்த மாதம் 2,069 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமாக 2 மாத காலத்திற்குள் 4100 பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.
மாண்டாஸ் புயலால் ஏற்பட்ட சேதம் – மீனவர்களுக்கு ரூ,35,000 நிவாரணத்தொகை.. முதல்வர் உத்தரவு!
Exams Daily Mobile App Download
இந்த பணியிடங்கள் ஹரியானா கவுஷல் ரோஸ்கர் நிகாமின் உதவியுடன் ஒப்பந்த அடிப்படையில் 2 மாதங்களுக்குள் நிரப்பப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். அதன்படி இந்த காலிப்பணியிடங்கள் முழுவதுமாக நிரப்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். அதன்படி இந்த மாதத்திலும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.