3 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 24ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!!
ஹரியானா மாநிலத்தில் 3 முதல் 5ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் அரசின் அறிவிப்பு வெளிவந்துள்ளது.
கொரோனா தொற்று:
கொரோனா தொற்று கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் உலகின் ஒரு மூலையில் இருந்து பரவத்தொடங்கி சில மாதங்களில் உலகின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. இதனால் உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளும் ஊரடங்கு முறையை பின்பற்றியது. இந்நிலையில் இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூடியது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வினா வங்கி – பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!!
பாடங்கள்:
பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் பாடங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் தொற்றின் தாக்கம் சற்று குறைந்து வந்ததால் உயர் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க மாநில அரசுகள் அனுமதியளித்தது.
ஹரியானா பள்ளிகள்:
ஹரியானா மாநிலத்தில் உயர் வகுப்புகளுக்கு முன்னதாகவே பள்ளிகள் திறந்து விட்ட காரணத்தால் மற்ற வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பதற்கான ஆலோசனை நடந்து வந்தது. தற்போது கொரோனா பாதிப்பு மறுபடியும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் ஹரியானாவில் வரும் 24ம் தேதியான நாளை முதல் 3 முதல் 5ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட உள்ளது என்று ஹரியானா அரசு அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் 1:30 வரை வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்