CSK அணியின் கேப்டன் தோனி என்றால் ஜடேஜாவின் பங்கு என்ன? முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து!
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் 2022 போட்டியில் தொடர் தோல்விக்கு பிறகு தோனி இன்னும் அணியின் தலைவராக இருப்பதாக தெரிகிறது என்றும் ரவீந்திர ஜடேஜா முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் என முன்னாள் வீரர் ஹர்பஹஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
ஹர்பஹஜன் சிங்
கடந்த மார்ச் 26ம் தேதி முதல் துவங்கி தற்போது 13வது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் ஒவ்வொரு அணிகளும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறது. அந்த வகையில் கடந்த பல சீசன்களாக தோல்வியை மட்டுமே தழுவிக் கொண்டிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட சில அணிகள் இந்த சீசனில் அபாரமாக விளையாடி, அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. இதனால் இந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிகளை கணிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த சீசன் மிக மோசமான ஆரம்பத்தை கொடுத்திருக்கிறது.
தூத்துக்குடியில் நாளை (ஏப்ரல் 6) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடிய CSK அணி அதிர்ச்சிகரமாக 3 ஆட்டங்களிலும் தோல்வியை தழுவி இருக்கிறது. இப்போது 3 போட்டிகளில் தோல்வியடைந்தாலும் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என CSK அணியின் கேப்டனும் நட்சத்திர ஆல்-ரவுண்டருமான ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். அதாவது, CSK அணியில் தீபக் சாஹர் இல்லாத நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் உட்பட தொடக்க வரிசை பேட்ஸ்மேன்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். இப்போது CSK அணியின் தற்போதைய நிலை குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். இது குறித்த ஹர்பஹஜனின் கூற்றுப்படி, ‘தோனி இன்னும் அணியின் தலைவராக இருப்பதாக உணர்கிறேன்.
ஜடேஜாவைப் பார்க்கும்போது, அவர் வளையத்திற்கு வெளியே பீல்டிங் செய்கிறார். அப்படிச் செய்வதன் மூலம் அவரால் பல விஷயங்களை கட்டுப்படுத்த முடியாது. அதனால், தோனி தான் ஃபீல்ட் செட்டிங் மற்றும் அனைத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் ஜடேஜா தனது கேப்டன் எடையை குறைத்து தோனியின் தோள்களில் வைக்கிறார். அது ‘பீல்ட் அமைப்பைக் கவனிக்கிறது. ஆனால் ஜடேஜாவின் ஒட்டுமொத்த பேட்டிங் மற்றும் பந்துவீச்சு திறமைகள் நம்பமுடியாததாக இருக்கும் போது அவர் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அணி சிறப்பாக செயல்படாதபோது சிறந்ததை பெறுவது அரிதானது. மேலும் சில விஷயங்களில் அவர் எழுந்து நின்று பேச வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.