மாணவர்களின் வாழ்க்கையை செதுக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள் – முக்கிய தலைவர்கள் வாழ்த்து!
இன்று ஆசிரியர் தினம் என்பதால் பிரதமர் மோடியில் இருந்து அனைத்து முக்கிய தலைவர்களும் நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆசிரியர் தினம்:
ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் செதுக்குகின்றனர். மாணவரின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக திகழ்ந்து வந்த ஆசிரியர்களுக்கான தினத்தை சிறப்பிக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் என பலரும் ஆசிரியர்தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
முதலில், பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுக்கு கல்வியை விதைக்கும் கடினமான உழைப்பாளிகளான ஆசிரியர்களுக்கு ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், ஆசிரியர் தினம் கொண்டாடுவதற்கு காரணமாக அமைந்த இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்துவதாகவும் அறிவித்துள்ளார். இதனையடுத்து, மாணவச் செல்வங்களை ஒளிரும் நன்முத்துக்களாய் சமூகத்தில் விதைத்திடும் நற்செயல் புரிந்திடும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – கவலையில் நகைப்பிரியர்கள்!
அடுத்ததாக மாணவச் செல்வங்களுக்கு கல்வியுடன், நற்குணம், ஒழுக்கம், சமத்துவம் கற்பித்து, மாணவர்களின் வளர்ச்சிக்காக தன் வாழ்வை அர்ப்பணித்து, சிறந்த அறிவுசார் தலைமுறையை உருவாகும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். மேலும், ஒழுக்கம், பண்பு, ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொது அறிவு, விளையாட்டு, உதவும் மனப்பான்மை என அனைத்திலும் மாணவர்களை ஊக்குவித்து சிறந்த மாணவர்களாக உருவாக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்