மீண்டும் 1ம் முதல் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – மாணவர்கள் மகிழ்ச்சி!!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 21 மாதங்களுக்கு பிறகு 1 -7 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பள்ளிகள் திறப்பு:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த வருடம் முதல் பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வந்தது .2021-22ம் ஆண்டுக்கான புதிய கல்வியாண்டு தொடங்கிய போதிலும் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுக்கும் காரணத்தால் தற்போது வரை பள்ளிகளை திறக்க முடியாத நிலை உருவானது. மேலும் அதிகரித்து வரும் தொற்று காரணமாக 10 மற்றும் 12 ம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் அரசு நோய் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டியது.
அதி வேகமாக பரவும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று, பெரும்பாலான நாடுகளில் ஆதிக்கம் – WHO எச்சரிக்கை!
இதன் விளைவாக கொரோனா தொற்று குறைய ஆரம்பித்தது. ஆன்லைன் கல்வியில் மாணவர்களின் கல்வித்தரம் குறித்த அச்சம் ஏற்ப்பட்டது. இதனால் மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து அனைத்து மாநில பள்ளிக்கல்வித்துறையும் ஆலோசனையில் ஈடுபட்டது. இதனையடுத்து படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகளை தொடங்கினர். மற்ற மாநிலங்களை தொடர்ந்து மஹாராஷ்டிராவில் அரசின் நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டது.
ஜன.14 வரை முழு ஊரடங்கு அமல் – டிச.20 முதல் கிறிஸ்துமஸ் விடுமுறைகள் துவக்கம்! அரசு அறிவிப்பு!
முதல் கட்டமாக மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது 1- 7 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு 21 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மீண்டும் மாணவர்கள் வழக்கம் போல பள்ளிக்கு செல்வதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆன்லைன் வகுப்பு கற்றலை விட நேரடி கற்றல் சிறந்தது என்று பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்