அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இந்த வருஷம் தீபாவளியை சூப்பரா கொண்டாடலாம்!!
மாநிலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ரேஷன் கார்டுதாரர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கின்றனர். இது தொடர்பான கூடுதல் தகவல்களை பார்ப்போம்.
ரேஷன் கார்டுதாரர்கள்
இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு அன்றாட உணவு தேவையை பூர்த்தி செய்வதற்கு ரேஷன் பொருட்கள் மிகவும் மலிவான விலையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் விற்கப்பட்டு வருகிறது. அத்துடன் கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் ரேஷன் பொருட்கள் இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நாட்டில் பசியுடன் இருப்போர் எண்ணிக்கை கணிசமாக குறையும். மேலும் இது போன்று பண்டிகை காலங்களிலும் சாமானிய மக்கள் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடும் வகையில் அந்தந்த பண்டிகைக்குரிய பொருட்கள் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும்.
மூத்த குடிமக்களுக்கான ஜாக்பாட் திட்டம் – மாதம் ரூ.18,500 பெறலாம்… உடனே சேருங்கள்!
இதில் குறிப்பாக தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் செய்வதற்கு தேவையான அனைத்து வகையான மளிகை பொருட்களும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும். இதன் மூலமாக சாமானிய மக்களும் தங்கள் குடும்பத்து உறுப்பினர்களுடன் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள். இதே போல் மற்ற மாநிலங்களிலும் பண்டிகை காலத்தில் பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அமைச்சரவை கூட்டம் ஒன்று நடைபெற்றது.
Exams Daily Mobile App Download
இந்த கூட்டத்தின் முடிவில், மாநிலத்தில் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.100 மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்க உள்ளதாக அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 1 கிலோ ரவா, நிலக்கடலை, சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் இடம்பெற்றிருக்கும். மேலும் தீபாவளிக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
கூட்டுறவு மருந்தாக ஊழியர் பணி நிரந்தரம் எப்போது