தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – செப்.15 முதல் காலை சிற்றுண்டி திட்டம்!
தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் 1 – 5 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செப் 15 ம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் மதுரையில் துவங்கி வைக்க உள்ளார்.
காலை சிற்றுண்டி திட்டம்:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறையின் மீது அரசு தொடர்ந்து தனது கவனத்தை செலுத்தி வருகிறது. மேலும் மாணவர்களுக்கு கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் நடப்பு கல்வியாண்டில் முதல்வர் அவர்கள் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அதில் ஒன்று தான் காலை சிற்றுண்டி திட்டம். இதன் மூலம் அரசு பள்ளியில் 1 – 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பள்ளியிலே காலை உணவு அளிக்கப்படும் என்று அரசு தெரிவித்தது.
முதல் கட்டமாக 21 மாநகராட்சிகளில் உள்ள அரசு பள்ளிகளில் இத்திட்டம் அமல்படுத்தபட்டது. இத்திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தற்போது மதுரை மாநகராட்சியிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. வரும் செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டும் திமுக தலைமையிலான அரசின் ஓராண்டு நிறைவு விழாவை முன்னிட்டும் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் மதுரையில் துவங்கி வைக்க உள்ளார்.
TNUSRB PC தேர்வரா நீங்கள்? ‘இதற்கு’ செப்.14 தான் இறுதி நாள்!
இந்த திட்டம் தொலை தூரங்களில் இருந்தும் கிராமங்களில் இருந்தும் பள்ளிக்கு வரும் மாணவர்களை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு காலை உப்புமா, கிச்சடி, பொங்கல் மற்றும் இனிப்பு வகைகள் வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பையும் பெற்றுள்ளது. மொத்தம் 14 மாநகராட்சிகளிலும், 23 நகராட்சிகளிலும் காலை சிற்றுண்டி திட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்