தமிழக காவல் துறையினருக்கான ஹாப்பி நியூஸ் – விடுப்பு குறித்த முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் காவலர்களுக்கு வாரந்தோறும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது சப்-இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
காவலர்களுக்கு விடுமுறை
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு துறை வாரியான மானியக் கோரிக்கை நடைபெற்றது. அதன்படி கடந்த மே மாதம் காவல்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பரிந்துரைத்தாவது, தமிழகத்தில் தற்போது போலீசாருக்கு வார விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இதனை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதாவது, 15 நாட்களுக்கு ஒரு முறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும் ஒரு நாள் விடுப்பு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். இது தொடர்பாக அரசு ஆலோசனை மேற்கொண்டு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இதனை ஏற்று முதலமைச்சர் தமிழகத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக தமிழக அரசு அரசாணை ஒன்று வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு ஆசிரியர் ஆகணுமா? முக்கிய தகவல் வெளியீடு!
இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் ஏற்கனவே போலீசாருக்கு வாரந்தோறும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காவல் துறையில் உள்ள 10,508 காவலர்கள் பயன் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த விடுமுறை தினத்தில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் காவல் துறையினருக்கு ஓய்வு கிடைக்கும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்