தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி மாதந்தோறும் குறைகேட்பு!

0
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இனி மாதந்தோறும் குறைகேட்பு!
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இனி மாதந்தோறும் குறைகேட்பு!
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி மாதந்தோறும் குறைகேட்பு!

தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தில் உள்ள குறைகளை தீர்த்து வைக்க, தாலுகா தோறும், ஒவ்வொரு மாதமும் குறைகேட்பு முகாம் நடத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த குறைகேட்பு முகாம் மீண்டும் நடைபெறும் என வருவாய்த்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

சூப்பர் அறிவிப்பு:

தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடை வாயிலாக எளிய மக்கள் பயன்பெறும் விதமாக அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மலிவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழக அரசால் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற, விண்ணப்பிக்கும் போது இருப்பிட சான்றுக்கான முக்கிய ஆவணமாக, ரேஷன் கார்டு பயன்படுகிறது. இதையடுத்து தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகையும் மற்றும் நிவாரண தொகையும் ரேஷன் கார்டு வாயிலாக பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாமல் சென்றடைகிறது.

TN Job “FB  Group” Join Now

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரேஷன் அட்டை பெற ரேஷன் அட்டையை பெறுவதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. புதிதாக ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து, சில நடைமுறை சிக்கல் காரணமாக ரேஷன் அட்டை பெறுவதற்கு பல மாதங்கள் ஆகிவிடுகிறது. மேலும் ரேஷன் அட்டையில் ஏற்படும் சிறிய அளவிலான பிழைகளை திருத்துவதிலும் பொதுமக்களுக்கு பல பிரச்சனைகளும் உள்ளன. இந்த மாதிரியான குறைகளை போக்குவதற்கு தமிழகத்தில் குறைகேட்பு முகாம் ஒவ்வொரு மாதமும், 2வது சனிக்கிழமை அன்று நடத்தப்பட்டு வந்தது.

தமிழகத்தில் நாளை (மே 13) உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா எதிரொலியால்,பல ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமலில் இருந்தது. இதனால் இந்த குறைகேட்பு முகாம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது, ரேஷன் கார்டு முகவரி மாற்றம், திருத்தம், புதிய கார்டு விண்ணப்பம் போன்ற பணிகளுக்கு, பொதுமக்கள், ‘இ-சேவை’ மையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது தாக்கம் குறைந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டு உள்ளன. எனவே மீண்டும் ஒவ்வொரு மாதமும், 2வது சனிக்கிழமை, தாலுகா அளவிலான குறைகேட்பு முகாம் நடத்தப்படும் மற்றும் குடிமைப்பொருள் தனி தாசில்தார் அல்லது வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில், குறைகேட்பு முகாம் நடத்த வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது என வருவாய்த்துறை அதிகாரிகள் கூறினர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!