தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அரசு முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. அதாவது புதிய ரேஷன் கார்டுகளை பயனாளிகளின் வீடுகளுக்கு அஞ்சலில் அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்து, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
முக்கிய உத்தரவு:
தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் நாட்டின் ஏழை மக்களுக்கு இலவச அரிசி, கோதுமை, ரேஷன் உதவி வழங்கப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, ரேஷன் அட்டை நாம் இந்த மாநிலத்தில் வசிப்போர் என்பதற்கான அடையாளமாக உள்ளது. நுகர்வோர் இந்த ரேஷன் அட்டையைப் பெறுவதற்கு ஏதுவாக, தமிழக அரசின் உணவு வழங்கல் துறை சார்பில், புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன.
Exams Daily Mobile App Download
புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், பல நாட்களாக அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டும் என்று நினைத்து கொண்டு சிலர், முக்கியத்துவம் வாய்ந்த ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்க தவறிவிடுகின்றனர். இருப்பினும் இவர்களுக்கு உதவும் நோக்கில், உணவு வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் விண்ணப்பத்தை பரிசீலித்து, உணவு வழங்கல் உதவி ஆணையர்கள் மற்றும் வட்ட வழங்கல் அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிய ரேஷன் கார்டுக்கு ஒப்புதல் அளிப்பர். அச்சிடப்பட்ட கார்டு சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்பி, பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மகப்பேறு விடுப்பு குறித்த முழு விவரம்!
மேலும் அலுவலகங்களில் வேண்டுமென்றே ரேஷன் கார்டு வழங்க தாமதம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் அச்சிடப்பட்ட ரேஷன் கார்டை, பயனாளிகளின் வீடுகளுக்கு அஞ்சலில் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அத்திட்டத்தை செயல்படுத்த அரசிடம், உணவு வழங்கல் துறை அனுமதி கேட்டது. அதை பரிசீலித்த அரசு ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, அஞ்சலில் அதை பெற விரும்புவோர், அஞ்சல் கட்டணமாக, 25 ரூபாயை இணையதளம் வாயிலாகவே செலுத்த வேண்டும். நகல் கார்டுக்கு, 20 ரூபாய் கட்டணமும், அஞ்சல் கட்டணத்திற்கு, 25 ரூபாய் என, மொத்தம், 45 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.