வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ் – Jio பயனர்களுக்கு முகேஷ் அம்பானி வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!
இந்தியாவில் இன்று (அக் 1) 5ஜி சேவையை, பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். மேலும் 2023 ஆம் ஆண்டிற்குள் இந்தியா முழுவதும் 5ஜி சேவை கொண்டுவரப்படும் என ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
5ஜி சேவை
இந்தியாவில் 5ஜி சேவை ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. அதில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா, அதானி குழுமத்தின் அதானி டேட்டா போன்ற நிறுவனங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று (அக் 1) டெல்லியில் பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 6வது இந்திய கைபேசி மாநாட்டில் 5ஜி சேவையை, பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.
இந்த விழாவில் கலந்து கொண்ட ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி கூறுகையில், 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் அனைத்து இந்தியருக்கும் 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் வழங்கும் என தெரிவித்தார். மேலும் இந்த மாதம் தீபாவளி பண்டிகை வர இருக்கும் நிலையில், அதற்குள் நாடு முழுவதும் உள்ள குறிப்பிட்ட நகரங்களில் 5ஜி சேவை கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்தார். முதற்கட்டமாக 5ஜி சேவை டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய மெட்ரோ நகரங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
பிரபல இந்திய நிறுவனத்தில் புதிதாக 1,000 வேலைவாய்ப்புகள் – பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்!
Exams Daily Mobile App Download
அதன் பின் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு மற்ற நகரங்களுக்கு கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்தார். மேலும் ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை உருவாக்க ரூ. 2 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை உயர்ந்த தரம் மற்றும் மலிவு விலையில் கிடைக்கும். சீனா, அமெரிக்காவை விட இந்தியாவை தரவு சார்ந்த பொருளாதார நாடாக மாற்ற நாங்க உறுதியளித்துள்ளோம் என பேசியுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்